பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முல்லைத்திவு நகர்நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவில் சிவில் சமூகத்தினர், மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அதிகமானோர் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பேரணியுடன் இணைந்துள்ளார்.

