ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவாம் –சரத் வீரசேகர

224 0

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு சமூக முறைகேடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.