எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு

180 0

எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வே துறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தற்சமயம் 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளதோடு, இதனை 40 சதவீதம் வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் சுற்றாடல் மாசடைதல், வாகன நெரிசல் கூடுதல் செலவினம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.