சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு

266 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.