மண்டைதீவில் காணி அபகரிப்பு

280 0

மண்டைதீவு பிரதேசத்தில் வெலிசுமண கடற்படை முகாமுக்கு அருகில் சட்டவிரோதமான காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நில அளவையாளர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடந்த அந்த இடத்துக்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வீதியை மறித்துப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் நாவலன் உட்பட பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.