இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

319 0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்று உறுதியானதை அடுத்து, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணித்தாக தெரிவிக்கப்படுக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் அதிகரித்த மாரடைப்பே அவரின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது.