தீப்பற்றி எரிந்த கப்பலின் எரிபொருள் கசிவு காரணமாக சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது..!

391 0

கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த நிவ்டயமன்ட் கப்பலில் இருந்து வெளியான எரிபொருள் படிவங்கள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பாதிப்புக்களுக்கு ஏற்ற வகையில் இழப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட மா அதிபர் தெரிவித்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த எரிபொருள் கசிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது