இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு

232 0

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து 583 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 480 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை 43 ஆயிரத்து 747 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும், ஆறாயிரத்து 589 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 247 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.