தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்க ஔிந்து கொண்டாரா அனுருத்த ?

201 0

வீட்டு விருந்து ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் அனுருத்த பாதெனிய தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக ஔிந்துள்ளதாக அருண சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார பரிசோதகர்கள் மூவர் நேற்று (13) இரவு தனிமைப்படுத்தல் உத்தரவை வழங்க அனுருத்தவின் வீட்டிற்கு சென்றனர். எனினும் நுழைவாயில் திறக்கப்படவில்லை என்றும் வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டது எனவும், இதனால் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று உத்தரவிடுமாறு அதிகாரிகள் பணித்தனர் எனவும் அப்பத்திரிகை தெரிவித்தது.

களனி ; டிபிடிகொடவில் உள்ள அனுருத்தவின் வீட்டில் 8ம் திகதி விருந்து இடம்பெற்றது என்றும் அதில் 20 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதியானது என்றும் இவ்வாறான நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.