மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 10 பேர் பலியானார்கள்.
உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.