மேல் மாகாணத்திலிருந்து வெளிவேறுபவர்களுக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனை செய்ய திட்டம்

198 0

மேல் மாகாணத்திலிருந்து வெளிவேறுபவர்களை இலக்கு வைத்து, இன்று முதல் 11 இடங்களில் மீண்டும் றெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையானது கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் கடந்த 5 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில், இன்று முதல் றெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.