முள்ளியவளையில் மீட்கப்பட்ட சடலம்! மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

213 0

முல்லைத்தீவு, முள்ளியவளை நாவல்காட்டுக் கிராமத்தில் இருந்து உடல் ஒன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது. மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கிணற்றில் இருந்து துர்நாற்றம் கிளம்பியதை அடுத்துப் பார்த்தபோதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உருக்குலைந்திருந்த அந்தச் சடலத்தில் ஆண்கள் அணியும் ரீ சேர்ட் ஒன்று காணப்பட்டது.

முல்லைத்தீவு நீதிவான் பா.லெனிக்குமார், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த மனித எச்சங்கள் மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் அந்த நபர் நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது வெளிப்பட்டது.

இவர் 6 மாதங்களுக்கு உட்பட்ட பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

முள்ளியவளைப் பகுதியில் அந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்களின் மரபணுக்கனைப் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.