தம்புள்ளையில் மர்மமான முறையில் உயிரிழந்தவருக்கு கொரோனா

247 0

தம்புள்ளையில் உள்ள விடுதியில் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கல் வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தம்புள்ளை பொலிஸ் பிரிவினர், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் விடுதியின் உரிமையாளர்கள் என அனைவரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

40 வயதுடைய குறித்த நபர் தொற்றினால் உயிரிழந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.