குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

1144 0

weயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவரிடம் இருந்து 80 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பன்னிபிட்டி – ஹம்பகஸ் பகுதியில் ஹெரோயின் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்ந்து ஒன்று காவல்துறையினரின் உத்தரவை மீறிச் சென்றுள்ளது.

இதன்போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் சிற்றூர்ந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment