மாகாணசபை தேர்தல்கள் குறித்த விடயத்தில் இந்தியா தலையிடாது-ஆங்கில வாரஇதழ்

259 0

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்தியா தலையிடாது என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் தொடபான முடிவுகளில் தலையிடும் எண்ணம் இந்தியாவிற்கு உள்ளதா என சண்டே மோர்னிங் தொடர்புகொண்டு கேட்டவேளை இந்திய தூதரகம் அவ்வாறான எண்ணம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளது.

இது இலங்கையின் உள்ளுராட்சிகள் தொடர்பான விடயம் இந்த விடயத்தில் தலையிடும் நோக்கம் இந்தியாவிற்கு இல்லை என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளது.
உரியமுறையில் செயற்படுவதும் தேர்தலை நடத்துவதா என தீர்மானிப்பதும் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவிடயம், என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளது.