மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை

447 0

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பரிசோதனைகளின் ஊடாக 07 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஊடாக இதுவரையில் 12,929 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.