யாழில் வாள்வெட்டு-பெண் ஒருவர் உட்பட 3 பேர் வைத்தியசாலையில்

221 0

யாழ்.பருத்துறை கரணவாய் – முதலைகுழி கிராமத்தில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சந்திரமோகன் சஜிந்தன் (வயது 29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது 55), தேவராசா ரஞ்சிதா (வயது 35) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.