கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரிடம் ஒப்படைப்பு

181 0

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த கஞ்சா பொதிகள் நேற்று (திங்கட்கிழமை) நண்பகல் கைப்பற்றப்பட்டது.

எனினும் குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்தோடு தொடர்புடையவர்களை கைது செய்ய காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.