போஸ்னியாவில் அகதிகள் முகாமில் தீ விபத்து!

230 0

போஸ்னியா (Bosnia) நாட்டிலுள்ள  அகதிகள் முகாமில் நேற்றைய தினம்  பயங்கர தீ விபத்தொன்று நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளளன.

அந்நாட்டின் வட மேற்கு பகுதியின் Bihac என்ற நகரிலுள்ள குறித்த அகதிகள் முகாமில் சுமார் 1, 200 பேர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகின்றது.

 

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இத் தீ விபத்தில் சிக்கிய மக்கள், தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, சாதுரியமாக உயிர் தப்பினர்.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என செய்திகள் தெரிவிக்கினறன.