கிராம சபை கூட்டம்- குன்னம் ஊராட்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

234 0

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தலையொட்டி கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகள், தேவைகளை கேட்டறிகிறார்.

கிராம சபை கூட்டத்தில்   முக ஸ்டாலின்  கூறியதாவது:

* ஜெயலலிதாவின் மரணம் இன்றும் மர்மமாக இருக்கிறது.

* விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை

*   ஜெயலலிதா   எங்களுக்கு எதிரிதான் என்றாலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

* கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள்.

* நானும் ரவுடி ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார்.

* விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

* ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.