கூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து விலகினர் சிறீதரன்

223 0

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளார்.

இது தொடர்பில் சிறீதரன் தெரிவித்திருப்பதாவது ;

“நான் கடந்த 5 வருடமாக அந்தப் பதவியில் இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமானவையாக இல்லை. அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிக்கின்றார் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள்.

ஆகவே அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை. எனவே அப் பதவியில் இருந்து வெளியேறி உள்ளேன். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட் டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளேன்” என்றார்.