பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

201 0

மடுல்சீமை பகுதியில் குடிசையொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிறுமியொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து குறித்த 3 வயது சிறுமி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை மீட்ட பொலிஸார்,  நீராட்டி, உணவு, உடைகள் வழங்கிய நிலையில் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குழந்தையை நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த குழந்தையை அவருடைய தாய் காட்டுப்பகுதியில் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.