சிறிலங்காவில் மேலும் 376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

181 0

சிறிலங்காவில் மேலும் 376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 708 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 27 ஆயிரத்து 61பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 542 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 160 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.