டிப்பர் மோதி ஒருவர் பலி; புதுக்காட்டு சந்தியில் சம்பவம்!

229 0

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு, புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் மோதிய விபத்தில் புலோப்பளை மேற்கை சேர்ந்த கிருஷ்ணன் நவநீதன் (56-வயது) என்பவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ் நோக்கிய திசையில் வருகை தந்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியிலுள்ள காபட் நிறுவனத்துக்கு திரும்பிய வேளை மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.