பருத்தித்துறையில் காணாமல் போன நபர் சடலமாக….

291 0

பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நபர் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணபிள்ளை சிவகுமார் வயது 34 என்பவர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க்கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் தற்போது காணப்படுகின்றது எனத் தெரியவந்துள்ளது.

குறித்த ஒழுங்கைப் பகுதி தற்போது கடும் மழை பெய்தமையால் நீர்நிறைந்து காணப்படுவதால் அதனை மக்கள் பாவிப்பது குறைத்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.