சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 950 பேர் கைது

211 0

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்  மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.