மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை

265 0
முறிகள் மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம், நீதியமைச்சர் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை கிடைக்கப்பெறலாம் என, நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, நீதியமைச்சர் அலி சப்ரி இதனை கூறியுள்ளார்.