ரோகித ராஜபக்ச தான் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லையாம்

250 0

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச தான் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார்.

நான் கொழும்பிலேயே இருக்கின்றேன் கண்டியில் தனிமைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நானோ எனது குடும்பமோ கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் நானும் எனது குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலை முன்னெடுத்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிசிஆர் சோதனையின் போது நாங்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது என அவர் தெரிவித்துள்ளார்.