இலங்கை கடற்பரப்பில் தமிழக இழுவை படகு மீன்பிடிக்கு அனுமதி?

424 0

Faina_de_PescaSesimbra-e1467686321235ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த விடயம் குறித்து இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என இலங்கை இந்திய மீனவர் நலன் பேணல் மன்றத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசகர் எஸ்.பீ.அந்தோனிமுத்து   தெரிவித்தார். ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றம்சுமத்தப்பட்டு தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுகின்றனர்.

எனினும் பல ஆண்டுகளாக தொடரும் ஸ்ரீலங்கா- இந்திய மீனர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தோனிமுத்து  கூறினார்.மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் பேசப்பட்டதாக  தெரிவித்த அவர்,  வட மாகாண மீனவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூட்டிக்காட்டினார்.

Leave a comment