கூர்மை கொண்ட  பார்வை தன்னில் யாவும் அறிவும் வித்தகன் ! தலைநகர் தந்த கவி

422 0
வேலுப்பிள்ளை பார்வதித்தாய் பெற்றெடுத்த மகனவன் !
 ஈழமண்ணை மீட்டெடுக்க காலம்தந்த கொடையவன் !
 அறுபத்தாறு அகவை காணும் வீறுகொண்ட புலியவன் !
 ஞாலம் தன்னில் பிரபாகரம் தோற்றுவித்த நெருப்பவன் !
 பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் போற்றுவோம் !
 பிரபாகரன் நிமிர்ந்த வாழ்வை ஏற்றி போற்றுவோம் !
 பிரபாகரன் போரின் வலிமை உலகில் ஏற்றுவோம் !
 பிரபாகரன் கொள்கை மீட்பின் வழியில் செல்லுவோம் !
தாயைப் போலே பாசம் காட்டி அன்பைப் பொழியும் தூயவன் !
வாய்மை கொண்ட குணம் படைத்த ஞானம் வீசும் சொத்தவன் !
கூர்மை கொண்ட பார்வை தன்னில் யாவும் அறியும் வித்தகன் !
நேர்மை தன்னில் வேர் பதித்து எம்மையாளும் சித்தவன் !
போர் முகத்தின் யுக்தி யாவும் கற்றறிந்த பேறவன் !
பாரின் விழிகள் நிமிர்ந்து பார்த்த உலகம் போற்றும் மன்னவன் !

எதிரிகூட தலைவணங்கும் உருவம் கொண்ட அழகவன் !
உரிமைப் போரில் உறுதி கொண்டு வழிநடத்தும் வல்லவன் !
வீரமேறும் ஈழப்போரில் மூலமாகி ஆள்பவன் !
வீறுகொண்ட படைநடத்தி பகைவர் நெஞ்சை பிளந்தவன் !
சங்ககால போர்த்திறனை விஞ்சி நின்ற வலியவன் !
எங்கள் வாழ்வை காத்து நிற்கும் சக்திமிக்க காவலன் !

தலைநகர் தந்த கவி .