மத்திய கிழக்கிலுள்ள இலங்கையரை அழைத்துவர நாள்தோறும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்

369 0

கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும்
இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்றமை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்
ளார்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களை மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் நாள் தோறும் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய நாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தொடர்பிலும் கவனம்
செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.