திவிநெகும வழக்கு – பெசிலை விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை

343 0

basil-rajapaksaதிவிநெகும வழக்கில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப் பெற அனுமதிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி இதற்கு அனுமதியளித்துள்ளார்.

இதற்கமைய பெசில் ராஜபக்ஸ மற்றும் சமுர்த்தி கொடுப்பனவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரை விடுவிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.