தீபங்கள் ஏற்றியே வணங்கிடுவோம் ! தலைநகர் தந்த கவி.

419 0
மணியோசை கேட்டதுமே மனவெளியின் கோயிலிலே
வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும்  -வீரக்
களமாடி உயிரீந்த திருநாளை வணங்கிடவே
தலைசாய்த்து நீர்ததும்பி விழி திறக்கும்
தமிழீழச் சரிதையிலே பதிவான போர்க் கலையை
உயிர் கொண்டு எழுதிய மாவீரர் – நம்
தமிழீழக் கொடியேற உருக்கான மேனியராய்
ஊன்றியே நிமிர்வான மாவீரர்
முதலான தமிழ்க்குடியின் விரிவாகும் சுதந்திரத்தில்
மூச்சாகி அலைவீசும் மாவீரர் – ஈழ
முடிசூடும் தாயவளின் உயிரான ஈழமதை
புவிதன்னில் பதிவாகும் மாவீரர்
கார்திகைப் பூச்சொரிய கல்லறைகள் தாள் திறக்க
தீபங்கள் ஏற்றியே வணங்கிடுவோம் -ஈழக்
கார்மேகம் விலகிடவே போர்வலிமை ஏற்றிடவே
மாவீர மணிகளை தொழுதிடுவோம்
காலத்தின் சுழற்சியிலே மாற்றங்கள் தோன்றிடவே
மனதினிலே மாவீரம் ஏற்றிடுவோம் – நம்
காலத்தை மாற்றிடும் மாவீர சக்தியின்

ஆற்றலை எந்நாளும் போற்றிடுவோம்

தலைநகர் தந்த கவி