கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம்-தலைநகர் தந்த கவி.

557 0
கார்த்திகை மாதத்தில் பூக்கின்றோம் – ஈழ
தேசத்தின் மலர்களாய் விரிகின்றோம்
கல்லறை மேனியர் கழல்களில் வீழ்ந்தே
கண்ணீர் பூக்களாய் சொரிகின்றோம்
– கார்த்திகை  –
தேசத்தின் நிறங்களை தரிக்கின்றோம்  – ஈழ
மண்ணின் உணர்வினில் எழுகின்றோம்
மாவீரர் நினைவினில் காலத்தின் வெளியினில்
மாவீரர் தினத்திலே வருகின்றோம
– கார்த்திகை  –
மக்களின் துயரினில் கலக்கின்றோம்  – அவர்
இடரினை கண்டே வாடுகின்றோம்
மாவீரர் வருகையின் ஏக்கத்தில் அழ்ந்தே
நாளும் பொழுதும் துதிக்கின்றோம்
– கார்த்திகை  –
கார்த்திகை பூக்களாய் வாழ்கின்றோம் – ஈழ
தலைவரின் நெஞ்சினில் ஒளிர்கின்றோம்
மாவீரர் வாழ்வின் சரிதையில் மூழ்கியே
ஈழத்தின் பாதையில் செல்கிறோம் .

– கார்த்திகை –

தலைநகர் தந்த கவி