மட்டு. மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நிகழ்வு நடத்த தடை உத்தரவு

414 0

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதை தடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை, கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் இலங்கைத் தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்தினின் வீட்டுக்கு சென்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று(20) வழங்கியுள்ளனர்.

21/11/2020 தொடக்கம் எதிர்வரும் 27/11/2020 வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ அவர் கட்சி சார்ந்தவர்களோ ஏனையோர்களோ அவ்வாறான நினைவு நடத்தக்கூடாது எனவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் 26 ஆம் திகதியை அனுஷ்டிக்க வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.அரியநேத்திரனுடன் அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ், கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம், களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, நொச்சிமுனை சசிகரன் நிஷாந்தன் ஆகியவர்களுக்கு எதிராகவும் இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,