கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக தற்கா லிக மாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகளை மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானம்.
தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப் படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை நாளை 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொவிட் 19 சுகாதாரப் பாதுகாப்பு வழி காட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நெடுஞ்சாலை கள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமை ச்சு மற்றும் அதனுடைய தொடர்புடைய திட்ட முகாமைத் துவப் பிரிவுகளின் அதிகாரிகள் நாளையதினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ் சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட் டப் பிரிவின் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதி காரிகள் மாத்திரம் நாளையதினம் பாராளு மன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக் கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர் பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை இங்கு ஆராயப்படவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

