பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணி குறித்து விசாரிக்க புதிய குழு நியமனம்

278 0

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி குறித்து  விசாரிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் துணை ஆணை யாளரின் வழிகாட்டுதலின் கீழ் குற்ற வியல் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை நியமித் துள்ளார்.

 

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் தொடர்பில் விசா ரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதி பருக்குச் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார் என ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி குறித்து விசாரணையொன்றை முன்னெடுக்க இதற்கு முன்னரும் குற்றவியல் புலனாய்வு திணைக் களத் தினால் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், குறித்த அதிகாரிகள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.