இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

253 0

இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், சுய தனி மைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரி களால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை 28ஆயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 77ஆயிரத்து 531 பேர் தற்போது சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறையுடன் இணைந்து குறித்த வீடுகளைத் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளனர்.