ஐரோப்பிய நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு நெதர்லாந்துதான். இந் நாடு கடல் மட்டத்திற்கு மிகவும் கீழே அமைந்திருப்பதால் அங்கு எங்குப் பார்த்தாலும் அணைக்கட்டுகளும் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டு காணப்படுகின்றன.

இதனாலேயே இந்நாட்டில் அடிக்கடி வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியும் கடல் இருப்பதால், இந் நாட்டைச் சேர்ந்த ஐந்தோவன் தொழிநுட்பக் பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்கள் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டி பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பி.இ.டி பாட்டில்கள், வீட்டுக் குப்பை உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து இக் காரை உருவாக்கியுள்ளனர்.

18 மாதங்களில் வடிவமைக்கப்பட்ட இக் காருக்கு ‘லூகா’ என்று பெயரிட்டுள்ளார்கள். தற்போது, மணிக்கு 90 கிலோ மீற்றர் இயங்கும் இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோமீற்றர் வேகம் செல்லும். இருவர் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தொலைக்காட்சிகள், பொம்மைகள், சமையலறை உபகரணங்களிலுள்ள பிளாஸ்டிக்குகள் காரின் மேல் பகுதியிலும், தேங்காய் மற்றும் குதிரை முடிகள் இருக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

