பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.யேர்மனி கம்பூர்க்.

623 0

07.11.2020 சனிக்கிழமை யேர்மனி கம்பூர்க் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

2.11.2007ம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் வான்குண்டுத்தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் 13ம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வை ஒன்றிணைந்து நினைவுகூர முடியாத கொரொனா நோய்த்தொற்று நிறைந்த சூழலில், இந்நிகழ்வு கொரொனா விதிமுறைகளுக்கு அமைவாக நினைவுகூரப்பட்டது.