தி.மு.க. சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என நிரூபிக்கப்படாத நிலையில் அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினேன்.
தி.மு.க. சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.
இந்த கருத்து கேட்பை பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பு அல்லவா செய்திருக்க வேண்டும்? ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா பரவி வருவதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா?
எல்லாவற்றையும் தலை கீழாகச் செய்வதுதான் அ.தி.மு.க. அரசா?
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

