பெரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 11-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8.32 லட்சத்தை கடந்துள்ளது.

