சிறிலங்காவில் மேலும் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 857ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 335ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை ஐயாயிரத்து 249 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 65 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 21 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.