சிறிலங்காவில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

297 0

சிறிலங்காவில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஆறு பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்க்ள எனவும் ஏனைய 187 பேரும் பேலியகொட மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 378ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்து 856ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை நான்காயிரத்து 905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஐயாயிரத்து 931 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 20 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.