கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் விசிறும் நடவடிக்கைகள் இன்று ( வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் வழிகாட்டலில் இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. இந்த பணிகள் இன்று காலை ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையின்போது ஹட்டன் இருந்து சேவையில் ஈடுபடும் அரச,தனியார் பேருந்துக்கள்,முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.