யாழ் – பருத்தித்துறை ஊடான 750ம் இலக்க வழித்தட தனியார் சேவைகள் நிறுத்தம்

351 0

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் ஊடான 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கரவெட்டி இராஜ கிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி இராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காெரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

இதன்காரணமாக தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த எவராவது தனியார் பேருந்து சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.