வாழைச்சேனையில் சிறுவர்கள் இருவருக்கு தொற்று!

256 0

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (28) மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் அறுபது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

அறுபது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் தந்தைக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் மூலம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இதுவரை 29 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபோரதீவு, பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் செல்வோருக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்கள் மாத்திரம் காணப்படுகின்றது.