வடமராட்சி ராஜகிராமம் முடக்கப்பட்டது!

230 0

வடமராட்சி – ராஜ கிராமம் நேற்று (29) முதல் முடக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று (28) அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர் என்பதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜ கிராமத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.