மதுகம – வலல்லாவிட பகுதியில் 3 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதோடு, அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.