மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டையொட்டி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகளின் கண்காட்சி, பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்து போன உறவினர்களை நினைவுகூரும் விதமாக அந்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கொரோனாவின் போது பணிபுரிந்த முன்கள பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையிலும் டெல் கார்மென் அருங்காட்சியகத்தில் இக் கண்காட்சி நடைபெற்றது.
இதில் மரணத்தின் பின்னரான மனித வாழ்க்கை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, மனித எலும்பு கூடுகள் உருவத்தில் விதவிதமான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன.